அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 27 நவம்பர், 2010

ஜனாதிபதி - இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

னாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

புதன், 1 செப்டம்பர், 2010

அதிகாரம் உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் - ஜனாதிபதி

திகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

சனி, 10 ஏப்ரல், 2010

தோல்வியடைந்தோருக்கு துன்பம் விளைவிக்காது வெற்றியைக் கொண்டாடுங்கள்!



எமது தாய் நாடு எதிர்நோக்கும் சகலவிதமான சவால்களையும் முறியடிக்கக்கூடிய பலமிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்க உதவுமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.

வியாழன், 4 மார்ச், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நவம்பர் 18 ஆம் திகதி பதவியேற்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது இரண்டாவது பதவிக்காலத்திற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் ஜி எல் பீரிஸ் இன்று ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் தமது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே அவர், ஜனாதிபதி தேர்தலை கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தி, அதில் பாரிய வெற்றியை பெற்றார்.

இந்தநிலையில் இலங்கையின் உயர்நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி அவர் இரண்டாவது தவணைக்காக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் பதவியேற்கும் காலத்திலிருந்து ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 3 மார்ச், 2010

மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கிற்கு ஜனாதிபதி விஜயம்.

தியகமவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டரங்கமான மஹிந்த ராஜபக்ச விளையாட்டுத் திடலுக்கு ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.

வார இறுதியை முன்னிட்டு அங்கு திரண்டிருந்த பெருந்திரளான பொதுமக்கள் ஜனாதிபதியுடன் அளவளாவியதுடன் தமது மகிழ்ச்சியையும் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள். ஜனாதிபதியுடன் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் பாலித பெரேராவும் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இலங்கையில் இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு


சீன ஆதரவுடன், இலங்கையில் இணையத்தளங்களை தணிக்கை மற்றும் தடைசெய்யும் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி இணையத்தளங்களுக்கு தணிக்கையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவற்றிற்கு அனுமதி பத்திரங்களையும் செயற்பாட்டு கட்டணங்களையும் விதிப்பதை நோக்காக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருந்தாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஏற்கனவே இலங்கையில் ‘லங்கா இ நியூஸ்”, ‘லங்கா நியூஸ் வெப்” “தமிழ் கார்டியன்” மற்றும் “தமிழ் நெற்” என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஏனைய செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் புதிய இணையத்தள நடைமுறைகளுக்கு குறித்த இணையத்தளங்கள் உட்படவேண்டும் என்பதே அந்த ஆணைக்குழுவின் நோக்காக இருந்தது.

எனினும் செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் தமக்கு கிடைக்கவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஸ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்களை கண்காணிப்பது தமது ஆணைக்குழுவின் பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், எனினும் சில இணையத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன எனக்குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், தாம் அவ்வாறான திட்டம் ஒன்றுக்கு நிதியளிக்க தயார் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு


சீன ஆதரவுடன், இலங்கையில் இணையத்தளங்களை தணிக்கை மற்றும் தடைசெய்யும் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி இணையத்தளங்களுக்கு தணிக்கையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவற்றிற்கு அனுமதி பத்திரங்களையும் செயற்பாட்டு கட்டணங்களையும் விதிப்பதை நோக்காக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருந்தாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஏற்கனவே இலங்கையில் ‘லங்கா இ நியூஸ்”, ‘லங்கா நியூஸ் வெப்” “தமிழ் கார்டியன்” மற்றும் “தமிழ் நெற்” என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஏனைய செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் புதிய இணையத்தள நடைமுறைகளுக்கு குறித்த இணையத்தளங்கள் உட்படவேண்டும் என்பதே அந்த ஆணைக்குழுவின் நோக்காக இருந்தது.

எனினும் செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் தமக்கு கிடைக்கவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஸ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்களை கண்காணிப்பது தமது ஆணைக்குழுவின் பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், எனினும் சில இணையத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன எனக்குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், தாம் அவ்வாறான திட்டம் ஒன்றுக்கு நிதியளிக்க தயார் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனி, 20 பிப்ரவரி, 2010

இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம்: மஹிந்த “இந்தியா எனது உறவினர்! ஏனைய நாடுகள் எனது நண்பர்கள்”


கடந்த ஜனாதிபதி தேர்தலில் 18 வீத அதிகப்படியான வாக்குகளை பெற்று தாம் வெற்றியீட்டியமையானது தமக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து தாம் கவலை கொள்ளவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் அங்கும் சிலர் தமக்கு வாக்களித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத்துறையில் அனுபவமின்மை என்பனவே தமக்கு அதிகப்படியான வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டிள்ளார்.

சரத் பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக்காலத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதுவும் பேசாமல் தம்மை கைதுசெய்து அதி பாதுகாப்புக்கூடிய போகம்பரை சிறையில் அடைக்கவேண்டும் உட்பட்ட தமது குடும்பத்திற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பொறுத்தவரை தாம் மேற்கொண்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், சரத் பொன்சேகாவின் முகாமில் இருந்தோர் அதனை அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு கிராமங்களில் உள்ள மக்கள் பெருமளவில் வாக்களித்ததாக தெரிவித்த அவர் ஜனநாயகத்தை சமாதானத்தை விரும்பிய நகர்ப்புற குறிப்பாக கொழும்பு கண்டி மக்களும் தமக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றிக்கு காரணமானவர் யார் என்ற விடயத்தில் மக்கள் தமது வாக்குகள் மூலம் தம்மையே தெரிவு செய்ததாக குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச தாஜ்மஹாலை கட்டிய மேசனையோ அல்லது சிரேஸ்ட பொறியியலாளரையோ மக்கள் நினைவு கூருவதில்லை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவர், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தினரும் தம்முடன் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்று “மஹிந்த போடா” “கோத்தபாய போடா” பசில் போடா” என தமிழில் பேசியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தம்மை நிராகரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதானமான இனப்பிரச்சினை தீர்வுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் பிரச்சினையை முறையாக தெரிந்து கொள்ளர்து அவசரமாக கொண்டு வரப்பட்ட ஒன்று என தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து விட்டது. பொதுத்தேர்தல் நடைபெறப்போகிறது. அடுத்ததாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்திய பின்னரும் இடம்பெயர்ந்தோரை குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் படைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்ததாது அவர்களுக்கு பொலிஸ் பயிற்சிகள் மாத்திரம் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்கள் தென்னிலங்கையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை பெர்றுத்தவரையில் 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலைமை மாறி இன்று அவர்களின் வீதம் 30 ஆக குறைந்துள்ளது. இந்தநிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகை கொழும்பில் அதிகரித்துள்ளமையானது எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்ததாது என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் அதில் பங்கேற்க வேண்டும். இதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தம்முடன் இணைந்து வர விருப்பமில்லாதவர்களாக இருப்பின் புதிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் போது அவர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை தாம் நடத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா தமது உறவினர் எனக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச இலங்கைக்கு உதவிசெய்யும் ஏனைய நாடுகள் தமது நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள அவர், நீதித்துறையின் முன்னால் அவரின் விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையால் தம்மால் அதில் தலையிடமுடியாது எனக்குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நாடு வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கும் என மஹிந்த ராஜபக்ச தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம்: மஹிந்த “இந்தியா எனது உறவினர்! ஏனைய நாடுகள் எனது நண்பர்கள்”


கடந்த ஜனாதிபதி தேர்தலில் 18 வீத அதிகப்படியான வாக்குகளை பெற்று தாம் வெற்றியீட்டியமையானது தமக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து தாம் கவலை கொள்ளவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் அங்கும் சிலர் தமக்கு வாக்களித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத்துறையில் அனுபவமின்மை என்பனவே தமக்கு அதிகப்படியான வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டிள்ளார்.

சரத் பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக்காலத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதுவும் பேசாமல் தம்மை கைதுசெய்து அதி பாதுகாப்புக்கூடிய போகம்பரை சிறையில் அடைக்கவேண்டும் உட்பட்ட தமது குடும்பத்திற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பொறுத்தவரை தாம் மேற்கொண்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், சரத் பொன்சேகாவின் முகாமில் இருந்தோர் அதனை அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு கிராமங்களில் உள்ள மக்கள் பெருமளவில் வாக்களித்ததாக தெரிவித்த அவர் ஜனநாயகத்தை சமாதானத்தை விரும்பிய நகர்ப்புற குறிப்பாக கொழும்பு கண்டி மக்களும் தமக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றிக்கு காரணமானவர் யார் என்ற விடயத்தில் மக்கள் தமது வாக்குகள் மூலம் தம்மையே தெரிவு செய்ததாக குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச தாஜ்மஹாலை கட்டிய மேசனையோ அல்லது சிரேஸ்ட பொறியியலாளரையோ மக்கள் நினைவு கூருவதில்லை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவர், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தினரும் தம்முடன் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்று “மஹிந்த போடா” “கோத்தபாய போடா” பசில் போடா” என தமிழில் பேசியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தம்மை நிராகரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதானமான இனப்பிரச்சினை தீர்வுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் பிரச்சினையை முறையாக தெரிந்து கொள்ளர்து அவசரமாக கொண்டு வரப்பட்ட ஒன்று என தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து விட்டது. பொதுத்தேர்தல் நடைபெறப்போகிறது. அடுத்ததாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்திய பின்னரும் இடம்பெயர்ந்தோரை குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் படைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்ததாது அவர்களுக்கு பொலிஸ் பயிற்சிகள் மாத்திரம் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்கள் தென்னிலங்கையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை பெர்றுத்தவரையில் 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலைமை மாறி இன்று அவர்களின் வீதம் 30 ஆக குறைந்துள்ளது. இந்தநிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகை கொழும்பில் அதிகரித்துள்ளமையானது எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்ததாது என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் அதில் பங்கேற்க வேண்டும். இதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தம்முடன் இணைந்து வர விருப்பமில்லாதவர்களாக இருப்பின் புதிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் போது அவர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை தாம் நடத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா தமது உறவினர் எனக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச இலங்கைக்கு உதவிசெய்யும் ஏனைய நாடுகள் தமது நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள அவர், நீதித்துறையின் முன்னால் அவரின் விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையால் தம்மால் அதில் தலையிடமுடியாது எனக்குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நாடு வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கும் என மஹிந்த ராஜபக்ச தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 19 டிசம்பர், 2009

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த


இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் எந்தவொரு தடையுமின்றி இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

அதற்காக ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வேனே தவிர பிரபாகரனின் தாய், தந்தையர் கோடிக்கணக்கான ரூபாய் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவேன் என நான் அன்று வழங்கிய வாக்குறுதியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம். முன்பு கூட்டங்களுக்கு வரும் ஆதரவாளர்கள் மாலையானதும் தமது வீடுகளுக்கு சென்று விடுவர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்நிலை காணப்பட்டது.

எனினும், இன்று இக்கூட்டத்துக்கு வந்த அனைவரும் இரவாகியும் போகாமல் இருப்பது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் கிடைத்த பயனாகும். பயங்கரவாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டு சென்றபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

எமது நாட்டின் தலைவர்கள் சில வெளிநாடுகளுக்குச் சென்று கூட யுத்தத்தினை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை.

வெளிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது கூட எதிர்க்கட்சித் தலைவர் அவற்றை வழங்கவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே முயற்சிக்கின்றோம். அதையும் தடைச்செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சபாநாயகரைக் கூட தெரிவு செய்துகொள்ள முடியாத பாராளுமன்றம் ஒன்றே எமக்கிருந்தது. எனினும், இன்று எமது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் பலர் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டத்தினையும் புகைத்தல் கட்டுப்பாட்டுத் திட்டத்தினையும் நாம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். இதன் மூலம் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழந்த போதும் நாட்டில் சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நாம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பது எமக்குத் தெரியும். நாட்டில் முறைகேடுகளும் வீண்விரயமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. இவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் அடுத்து ஈடுபடவுள்ளோம்.

பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் ஒழித்தது போன்று நாட்டின் முறைகேடுகளையும் வீண்விரயத்தையும் ஒழித்துக் காட்டுவோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள்.

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த


இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் எந்தவொரு தடையுமின்றி இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

அதற்காக ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வேனே தவிர பிரபாகரனின் தாய், தந்தையர் கோடிக்கணக்கான ரூபாய் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவேன் என நான் அன்று வழங்கிய வாக்குறுதியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம். முன்பு கூட்டங்களுக்கு வரும் ஆதரவாளர்கள் மாலையானதும் தமது வீடுகளுக்கு சென்று விடுவர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்நிலை காணப்பட்டது.

எனினும், இன்று இக்கூட்டத்துக்கு வந்த அனைவரும் இரவாகியும் போகாமல் இருப்பது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் கிடைத்த பயனாகும். பயங்கரவாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டு சென்றபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

எமது நாட்டின் தலைவர்கள் சில வெளிநாடுகளுக்குச் சென்று கூட யுத்தத்தினை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை.

வெளிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது கூட எதிர்க்கட்சித் தலைவர் அவற்றை வழங்கவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே முயற்சிக்கின்றோம். அதையும் தடைச்செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சபாநாயகரைக் கூட தெரிவு செய்துகொள்ள முடியாத பாராளுமன்றம் ஒன்றே எமக்கிருந்தது. எனினும், இன்று எமது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் பலர் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டத்தினையும் புகைத்தல் கட்டுப்பாட்டுத் திட்டத்தினையும் நாம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். இதன் மூலம் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழந்த போதும் நாட்டில் சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நாம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பது எமக்குத் தெரியும். நாட்டில் முறைகேடுகளும் வீண்விரயமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. இவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் அடுத்து ஈடுபடவுள்ளோம்.

பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் ஒழித்தது போன்று நாட்டின் முறைகேடுகளையும் வீண்விரயத்தையும் ஒழித்துக் காட்டுவோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள்.

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த


இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் எந்தவொரு தடையுமின்றி இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

அதற்காக ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வேனே தவிர பிரபாகரனின் தாய், தந்தையர் கோடிக்கணக்கான ரூபாய் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவேன் என நான் அன்று வழங்கிய வாக்குறுதியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம். முன்பு கூட்டங்களுக்கு வரும் ஆதரவாளர்கள் மாலையானதும் தமது வீடுகளுக்கு சென்று விடுவர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்நிலை காணப்பட்டது.

எனினும், இன்று இக்கூட்டத்துக்கு வந்த அனைவரும் இரவாகியும் போகாமல் இருப்பது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் கிடைத்த பயனாகும். பயங்கரவாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டு சென்றபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

எமது நாட்டின் தலைவர்கள் சில வெளிநாடுகளுக்குச் சென்று கூட யுத்தத்தினை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை.

வெளிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது கூட எதிர்க்கட்சித் தலைவர் அவற்றை வழங்கவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே முயற்சிக்கின்றோம். அதையும் தடைச்செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சபாநாயகரைக் கூட தெரிவு செய்துகொள்ள முடியாத பாராளுமன்றம் ஒன்றே எமக்கிருந்தது. எனினும், இன்று எமது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் பலர் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டத்தினையும் புகைத்தல் கட்டுப்பாட்டுத் திட்டத்தினையும் நாம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். இதன் மூலம் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழந்த போதும் நாட்டில் சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நாம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பது எமக்குத் தெரியும். நாட்டில் முறைகேடுகளும் வீண்விரயமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. இவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் அடுத்து ஈடுபடவுள்ளோம்.

பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் ஒழித்தது போன்று நாட்டின் முறைகேடுகளையும் வீண்விரயத்தையும் ஒழித்துக் காட்டுவோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள்.

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த


இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் எந்தவொரு தடையுமின்றி இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன்.

அதற்காக ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வேனே தவிர பிரபாகரனின் தாய், தந்தையர் கோடிக்கணக்கான ரூபாய் தந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவருவேன் என நான் அன்று வழங்கிய வாக்குறுதியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம். முன்பு கூட்டங்களுக்கு வரும் ஆதரவாளர்கள் மாலையானதும் தமது வீடுகளுக்கு சென்று விடுவர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்நிலை காணப்பட்டது.

எனினும், இன்று இக்கூட்டத்துக்கு வந்த அனைவரும் இரவாகியும் போகாமல் இருப்பது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் கிடைத்த பயனாகும். பயங்கரவாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டை நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திக் கொண்டு சென்றபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

எமது நாட்டின் தலைவர்கள் சில வெளிநாடுகளுக்குச் சென்று கூட யுத்தத்தினை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் நாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தவில்லை.

வெளிநாடுகளிலிருந்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது கூட எதிர்க்கட்சித் தலைவர் அவற்றை வழங்கவிடாது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கடன்களைப் பெற்று நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே முயற்சிக்கின்றோம். அதையும் தடைச்செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சபாநாயகரைக் கூட தெரிவு செய்துகொள்ள முடியாத பாராளுமன்றம் ஒன்றே எமக்கிருந்தது. எனினும், இன்று எமது அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டின் நலனுக்காக தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். எதிர்காலத்திலும் பலர் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.

சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டத்தினையும் புகைத்தல் கட்டுப்பாட்டுத் திட்டத்தினையும் நாம் முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளோம். இதன் மூலம் அரசாங்கம் பெருமளவு வருமானத்தை இழந்த போதும் நாட்டில் சிறப்பான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே நாம் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவை என்பது எமக்குத் தெரியும். நாட்டில் முறைகேடுகளும் வீண்விரயமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது. இவற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் அடுத்து ஈடுபடவுள்ளோம்.

பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் ஒழித்தது போன்று நாட்டின் முறைகேடுகளையும் வீண்விரயத்தையும் ஒழித்துக் காட்டுவோம். இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள்.

BATTICALOA SONG