அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010

நளினியின் மனுவுக்கு தமிழக அரசின் அபிப்பிராயம் கோரும் உச்ச நீதிமன்றம்

யுட் தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியுமான நளினி ஸ்ரீகரனால் தாக்கல் செய்யப்பட்ட மனுபற்றிய மாநில அரசின் அபிப்பிராயத்தை தமிழ்நாட்டு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

வெள்ளி, 30 ஜூலை, 2010

நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதன், 12 மே, 2010

உணவில் விஷம் கலந்து கொடுத்து தன்னைக் கொல்லச் சதி : நளினி புகார்


ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும், நளினி, உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல சதி முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார்.
ஏப்ரல் 28 மற்றும் 30 தேதிகளில், சிறைத்துறை ஐஜிக்கு நளினி இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்கள் நளினி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 11 மே, 2010

நளினியுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கையர் இருவர் கைது!


முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பிலான வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி நளினி தம்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு வைத்திருந்த இலங்கையர் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

முன்கூட்டியே விடுதலை – நளினி மீண்டும் அப்பீல் மனு தாக்கல்

சென்னை: முன்கூட்டியே விடுதலை கோரி போராடி வரும் நளினி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

புதன், 7 ஏப்ரல், 2010

நளினி விடுதலை: நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் விடுதலை கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நளினி பொதுமன்னிப்பிற்குத் தகுதியானவர் அல்ல என்றும், எனவே அவரை விடுதலை செய்யவேண்டாம் என்று 2006ல் தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதன், 31 மார்ச், 2010

தமிழக அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்முறையீடு

தமிழக அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளார். இத்தகவலை வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 30 மார்ச், 2010

சட்ட ஒழுங்கு கெடும் ; படித்தவர் என்பது ஏற்புடையதல்ல ; நளினியை விடுவித்தால் விபரீதம் என்கிறது தமிழக அரசு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி முக்கிய குற்றம் புரிந்துள்ளார் என்றும் இவரை விடுவித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் எனவே விடுதலை செய்ய இயலாது என்றும் , இது தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை அப்படியே ஏற்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

BATTICALOA SONG