அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக தனது நண்பியுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்தனர். இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொலிஸாரின் உத்தரவிற்கு அமைய மட்டக்களப்பு, சினேகதீபம் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை தள வைத்திய அதிகாரி எஸ்.தட்சணாமுர்த்தி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG