அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 3 மே, 2011

14வயது சிறுமி 5மாதக் கர்ப்பிணி

ட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 48 வயதுடைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்கள் ஒன்றின் அடிப்படையில் ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபரை சனிக்கிழமை காலையில் கைது செய்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி திடீரென மயக்கம் அடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



0 கருத்துகள்:

BATTICALOA SONG