அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 24 மார்ச், 2011

14 வயது சிறுமி மீது 55 வயதான நபர் பாலியல் வல்லுறவு

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகல்சேனையின் பூலாக்காடு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை 55 வயதான நபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த சிறுமி வீட்டில் தனிமையிலிருந்த வேளையில் வீட்டிற்கு வந்த மேற்படி நபர், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG