அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 27 ஜூலை, 2010

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில்

கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன
. பல்கலைக்கழகத்தின் 5 முக்கிய பீடங்களான மருத்துவபீடம், கலை-கலாசாரபீடம், அரசியல்-விஞ்ஞான பீடம், வர்த்தக-முகாமைத்துவபீடம் உட்பட அனைத்து பீட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நாடளாவியரீதியில் நடைபெற்றுவரும் பல்கலைகழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியே இப்போராட்டம் இடம்பெறுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வந்தாறுமூலை, கல்லடி, அரசடி போன்ற இடங்களில் கிழக்கு பல்கலைக்கழக பீடங்கள் செயற்பட்டுவருகின்றன. சுமார் 100 விரிவுரையாளர்கள் இப்பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG