அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 ஜூன், 2010

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் யாழ். மாநகர முதல்வர் பிரதம அதிதியாகப் பங்குகொண்டார்

 யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றையதினம் (29) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
பாடசாலை அதிபர் திருமதி. பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர ழுதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களும் திரு.கு.பற்குணராஜா அவர்களும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர். விழாவின் ஆசியுரையை வணக்கத்திற்குரிய தேவதாசன் அடிகளார் நிகழ்த்தியதுடன் நிறுவுனர் நினைவுரை திருமதி. ரதிராணி யோகேந்திரராஜாவும் பரிசளிப்பு தின உரையை பிரதம விருந்தினர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா அவர்களும் நிகழ்த்தினார்கள்.
பரிசளிப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக பாடசாலை மட்டத்தில் பரிசு பெற்ற மாணவிகளுக்கும் மாவட்ட மட்டத்தில் பரிசு பெற்ற மாணவிகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பிரதம அதிதிகள் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

BATTICALOA SONG