அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 ஜூன், 2010

சபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால், அமர்விலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.


'அப்பி வெனுவென் அப்பி' என்ற திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்து, ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்னெட்டி இன்று சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மேர்வின் சில்வா கோபமாகப் பதிலளித்ததையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சபாநாயகரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா அமைதியானார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG