இலங்கைக்கும்,சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் இலங்கை தொழிலாளர்களுக்கு ஏன் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லாமே எமக்கு மாத்திரம் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல இங்கு பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக