அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2012

பிரதமர் நீதியரசர் தெரிவுக்குழு முன் ஆஜரானது பாராட்டக்குரியது: அரசாங்கம்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டார நாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானமையானது பாராட்டுக்குரியதாகும். இதில் அவர் முகம் கொடுப்பதற்கும் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கும் அரசியல் அமைப்பின் பிரகாரம் சகல உரிமைகளும் அவருக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, ஜோன் செனவிரட்ன மற்றும் லக்ஷ்மன் செனவிரட்டன ஆகியோர் இணைந்து மேற்கண்டவாறு தெரிவித்தனர். பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்க மீதான குற்றவியல் பிரேரணை குறித்து தெரிவுக்குழுவின் முதலாம் கட்ட விசாரணைகள் இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றன. இதனையடுத்து இந்த நெய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG