அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 3 அக்டோபர், 2012

படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது: பசில்


ந்தியாவில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் மிகவும் உறுதியாக இருப்பதாக இலங்கை இன்று புதன்கிழமை தெரிவித்ததுடன் சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதையும் நிராகரித்துள்ளது. 'அண்மையில் இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதால் உணர்வுகள் பாதிக்கட்டாலும் யாரும் இந்தியா மீதோ, இந்திய மக்கள் மீதோ வெறுப்பு கொள்ளவில்லை' என அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்.
இந்தியாவில் படையினரை பயிற்றுவிப்பதை இலங்கை மீள்பரிசீலனை செய்யவுள்ளது எனவும் அவர்களை சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்பும் சாத்தியம் உள்ளதா எனவும் கேட்கப்பட்ட போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 'பாதுகாப்பு செயலாளர் முதல்; இராணுவ தளபதிகள் வரை ஒவ்வொருவரும் இந்தியாவில் பயிற்றப்பட்டுள்ளனர். சகலரும் முதலில் இந்தியாவுக்கு செல்வர். அதன்பின்னரே அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்வர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG