அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

கனடாவிலிருந்து வந்தநபர் சாவகச்சேரியில் சடலமாக மீட்பு

சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி டச்சு வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சிவகுமார் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் அண்மையிலேயே கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வந்தவர் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG