அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 25 ஏப்ரல், 2011

புலிகள் அழிக்கப்படுவதை இந்திய அரசு விரும்பியது: கோர்டன் வெய்ஸ்

ந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பியதுடன் யுத்த வலயத்தின் உண்மை நிலைமையையும் அது அறிந்திருந்தது என முன்னாள் ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களிடம் மிகவும் நவீனமாக உளவுநுட்பங்கள் இருந்தமையால் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர் என பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் கூறினார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களுக்கு உண்டான இழப்புக்களை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் கூடுதலாக இயங்கியிருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு ஐ.நா. இலங்கை மீது அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும் எனவும் கோர்டன் வெய்ஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான இறுதி தாக்குதலை நிறுத்தும் நிலையில் இருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG