சாந்தபுரம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பிரதேச அபிவிருத்தியிலும் நாம் கூடிய கவனமெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (11) கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேச மக்களின் மீளக் குடியமர்த்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் யுத்தத்தினால் இப்பிரதேசம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இன்னும் சில வாரங்களில் மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது. ஆகவே மேலும் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆகையால் அதற்கு முன்னர் நாம்; விரைவாக உங்களுக்குரிய தற்காலிக வீடுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டும். இதற்கு மாவட்டச் செயலரும் பிரதேச செயலரும் முழுமையாக உதவுவார்கள் எனத் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக நிரந்தர வீடுகள் கிடைப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். காணியில்லாதோருக்கு காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல உங்களுடைய பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விரைவில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளையும் அனுமதியையும் பெற்றுத் தருவதாகவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மக்களைக் குழப்பும் வகையில் சிலரால் பரப்பிவிடப்படும் கதைகளையும் வதந்திகளையும் நீங்கள் நம்பக்கூடாது. மேலும் மேலும் நீங்கள் துன்பங்களைச் சந்திக்க இயலாது. உங்களுடைய துன்பங்களை வைத்தே அரசியல் நடத்துகின்ற அரசியல்வாதிகளையிட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இன்று 281 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஏற்கனவே 26 குடும்பங்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கான பாடசாலையான கலைமகள் வித்தியாலயம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





































0 கருத்துகள்:
கருத்துரையிடுக