அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

அச்சுவேலி – தொண்டமனாறு வீதி திறப்பு

தொண்டமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு அச்சுவேலி – தொண்டமனாறு வீதி பல வருடங்களுக்குப் பின்னர் நேற்று காலை திறக்கப்பட்டது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இவ்வருடத் திருவிழாவிற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலினை நீக்குவதற்காக இவ்வீதி திறந்து விடப்பட்டுள்ளது.
தொண்டமானாறு – தம்பாளை - இடைக்காடு – அச்சுவேலி ஊடான பாதையே திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இராணுவ அதிகாரிகளிடம் மேற்படி விடயம் தொடர்பாக விடுத்த வேண்டுகோளையடுத்து பாதை இன்று காலையில் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG