இறக்குவானை - சூரியகந்தை - 10ஆம் வளைவு பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
10ஆம் வளைவு பகுதியில் நேற்றைய தினம் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அவ்வாறான சடலமொன்றை குறித்த பகுதியி;ல் தாம் மீட்கவில்லை எனவும், அது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தேடுதல் நடவடிக்கைகளுக்காக தெனியாய பொலிஸாரும் தம்முடன் இணைந்து செயற்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
தெனியாய - ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய அத்துல அபயவிக்கிரம என வர்த்தகர் கடந்த 31ஆம் திகதி மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் தெனியாய - அணில்கந்த பகுதியிலிருந்து கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டிருந்தது. குறித்த வர்த்தகரின் சடலமே இவ்வாறு 10ஆம் வளைவு பகுதியில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக