அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010

திருமலை மாணவிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில்

காணாமல் போனதாக புகாரிடப்பட்ட, திருகோணமலை மகளிர் கல்லூரியொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும், இரு மாணவிகளும் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக திருகோணமலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பாடசாலைக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை என திருகோணமலை பொலிஸில் மாணவிகளின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இம்மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
அதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் மூலம் மாணவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தாம் கடத்தப்பட்டிருக்கவில்லை என்றும், பரீட்சை புள்ளி குறைவு காரணமாக வீட்டுக்கு செல்லாமல் பஸ் மூலம் புறப்பட்டு வந்ததாகவும் அவர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG