அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை?

பொலிஸ் விசாரணைகளில் நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை. யாரோ தவறாக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என செக்ஸ் சர்ச்சைக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர் நித்யஞானானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நித்யானந்தா குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம்.
நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
தான் ஆண்மையற்றவர் என்றும் அதனால் செக்ஸில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நித்யானந்தா கூறியதாக ஏற்கனவே வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG