இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
பெரும் எண்ணிக்கையானோர் திரண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமை வகித்தார்.பொலிஸ் தடுப்புவேலியொன்றை விழுத்திவிட்டு முன்னோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தின் மதிற்சுவரின் மேல் ஏறி நின்று பான் கீ மூனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக