அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் ருத்ரகுமாரன்

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஆதரவாளர் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.


இந்த விசாரணைகளில் சாட்சியளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மீளவும் இடம்பெறாமல் தடுப்பதற்கு சரியான முறையில் விசாரணை நடத்தி, அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணைகளுக்கு பூரண ஆதரவு அளிக்கப்படும் எனவும், சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முதல்தர சாட்சியங்களை திரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினால் நான்கு மாதங்களுக்கள் விசாரணைகளை நடத்தி முடிக்க முடியுமா என ருத்ரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணைக்கான காலப் பகுதியை மேலம் நீட்டிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG