அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

மும்பை: 13 வயது மாணவி பலாத்காரம்-தமிழக டியூசன் ஆசிரியர் கைது

மும்பை: மும்பை சாண்டாகுருஸ் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திர நாடார் (52). தமிழகத்தைச் சேர்ந்த இவர் எம்.எட் முடித்தவர். டியூசன் சென்டர் நடத்தி வரும் இவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

இவரிடம் டிஸ்லெக்சியா குறைபட்டால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியும் டியூசன் படித்து வந்தார். அந்தச் சிறுமியை இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த பெற்றோர் மும்பை கர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தார்.
அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து மும்பை போலீசார் சென்னை வந்து அவரது உறவினர் வீடுகளி்ல் தேடினர்.
ஆனால், அவர் மீண்டும் மும்பை சென்று நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சித்தார். இதையடுத்து நேற்று முன் தினம் அவரை நீதிமன்றம் அருகே வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
ராமச்சந்திரனிடம் பல மும்பை திரைப்பட நட்சத்திரங்களின் குழந்தைகளும் டியூசன் படித்து வந்துள்ளனர். அவர்களிடம் மணிக்கு பல ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து வந்துள்ளார். மேலும் சில மும்பை சினிமா புள்ளிகள் மூலம் இந்திப் படங்களுக்கு கதை, வசனம் எழுதவும் முயன்று வந்தார்.
இவது மகனும் மகள்களும் வெளிநாடுகளில் படித்து வரும் நிலையில், மும்பையில் மனைவியுடன் வசித்து வந்தார் ராமச்சந்திரன். இவரது ஒரு மகள் ரஷ்யாவில் படித்து வருகிறார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG