பல்வேறு நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியிலேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தமிழ் அரசியல் குழுக்களும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டதன் காரணமாக மக்களிடையே ஆரம்பத்திலிருந்து குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாகவும் இல்லாவிட்டால் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை தமது கட்சியினால் பெற்றிருக்கமுடியும் எனவும் சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
![]() | ![]() |
தமிழ்ச்செல்வனுடன் சம்பந்தன்-(ஆவணம்) |
சிறு தமிழ் அரசியல் குழுக்கள் எதனையும் சாதிக்காத போதிலும் தமது கட்சியின் வெற்றியை பாதிக்கச் செய்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளைத் தவிர்க்கவும் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் சமரசத்தை எட்டுவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் ஏற்கப்படமுடியாத கோரிக்கைகள் காரணமாகவே தோல்வியடைந்ததாக இரா.சம்பந்தன் கூறினார்.
![]() | ![]() |
தமிழக தலைவர்களுடன் த.தே.கூ தலைவர்கள் |
புலம்பெயர் மக்களின் பலமும் ஆதரவும் தமக்கு அவசியமாக உள்ளதாகவும் இரு தரப்புக்கு இடையிலும் இடைவெளி ஏற்படுவதை விரும்பவில்லையெனவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக