அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 4 மார்ச், 2010

மாணவர்களை தாக்கிய குற்றத்திற்காக பாடசாலை அதிபர் கைது


கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் உள்ள அரசாங்க பாடசாலையின் அதிபர் ஒருவர், தமது பாடசாலையில் பயிலும் ஐந்து மாணவர்களை தாக்கி அவர்களுக்கு காயம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட ஐந்து மாணவர்களும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மொரட்டுவ அங்குலான பொலிஸை சேர்ந்த இரண்டு பொலிஸார், இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் தம்வசம் அடையாள அட்டையை கொண்டிருக்கவில்லை என்பதன் காரணமாகவே கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பொலிஸ் நிலையத்திலேயே பொலிஸாரால் தாக்கப்பட்டு இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG