அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 27 பிப்ரவரி, 2010

ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை


விஜயவாடா: ஆந்திரா வில் ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை செய்யப்பட்டாள்.

செகந்திராபாத்தில் இருந்து கூடூருக்கு சென்ற சிம்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.

ரயில் விஜயவாடா அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

15 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாள்.

இதைச் பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்தச் சிறுமி யார் என்பது பற்றி விவரம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG