வியாழன், 18 ஏப்ரல், 2013

'ஷிராணியை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம்'

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரையே, ஷிராணி பண்டாரநாயக்காவை, நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் எனவும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக