திங்கள், 18 மார்ச், 2013

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆட்சேபனை மனு தாக்கல்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஆட்சேபனை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழுவிடம் இன்று திங்கட்கிழமை கோரியுள்ளார். சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று இன்று விசாரணைக்குழுவின் முன் ஆஜரானபோதே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக