அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

பயிரை மேய்கிறது வேலி..!

நாட்டின் சகல வர்த்தக நிலையங்களிலும் விலைப்பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பது நுகர்வோர் அதிகார சபையின் கடுமையான உத்தரவாகும். நேற்றுமுதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கிறது.
இந்த நடைமுறையை அரச அதிகாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை வசூலித்திருக்கிறார்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள்.
அவ்வாறு இரண்டு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஐவரை, பணியிலிருந்து நீக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தம்மிடம் பணம் வசூலித்ததாக வவுனியா பொலிஸாருக்கு 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறு சுயலாபம் கருதி செயற்படுவார்களேயானால் நாட்டின் எதிர்காலம் என்னாவது?

0 கருத்துகள்:

BATTICALOA SONG