அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்

இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் சமூக பணிகள் செய்ய வேண்டும்.


நகரம் முதல் குக்கிராமம் வரை மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் ரசிகர்களுக்குக் கூறி வரும் விஜய், ஏராளமான ஏழைகளுக்கு இன்று தன் கையால் உதவிகள் வழங்கினார்.
குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு அதிக கல்வி உதவிகளை அவர் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் விஜய். காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்ததானம் வழங்கினர்.
காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.
காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.
காலை 11 மணிக்கு சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்லத்திற்கு சீருடைகள் வழங்கினார்.
ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவருக்கு பி.ஈ.வரை படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.
விஜய் தலைமை நற்பணி இயக்க அலுவலக வாசலில் நடந்த அன்னதானம், மதியம் 12 மணிக்கு சாலிகிராமம் காவேரி பள்ளியில் நடந்த அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சின்மயா நகர் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானம் போன்றவற்றிலும் பங்கேற்றார் விஜய்.
சென்னை மாநகரில் ஈரத்ததானம் வழங்கிய 370 பேருக்கும் நற்பணிகள் செய்த 40 பேருக்கும் சான்றிதழ், புகைப்படங்களை இன்று மாலை 6 மணிக்கு ஷோபா மண்டபத்தில் வழங்குகிறார் விஜய்.
இதேபோன்ற நற்பணி நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG