அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 மார்ச், 2013

மனிதாபிமான பிரச்சினையில் கௌரவம் பார்க்கவேண்டியதில்லை: குர்ஷிட்


.நா மனித உரிமைபேரவையில் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்க வேண்டும் என இந்திய தமிழ்க்கட்சிகள் வற்புறுத்திவரும் நிலையில் தான் எடுக்கப்போகும் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா தன் நழுவல் போக்கை தொடர்ந்து வருகின்றது.
அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும்மாறு மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் அதை அமெரிக்காவிடம் விளக்கி சகலருக்கும் திருப்தியான ஒரு பிரேரணையை தயாரிக்கும்மாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் தான் கூறியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் நிருபர்களிடம் தெரிவித்தார். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை இதில் யாரும் கௌரவம் பார்க்கவேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பர் என்பதனையிட்டும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. இயலுமாயின் அவர்களுடன் நேரில் பேசி யாவருக்கும் ஏற்புடைய தீர்மான வரைவை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் கூறினார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG