யுத்தம் இல்லாத இக்காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதுகாப்புப் படைகளிலிருந்து வீரர்கள் தப்பிச் செல்கின்றனர். எனினும் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது விபரங்களை வெளியிட முடியாது என அரசாங்கம் இன்று சபையில் தெரிவித்தது.
அத்துடன் நாட்டில் இடம்பெற்றுவரும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் தப்பிச்சென்ற பாதுகாப்புப் படையினரை குற்றம் சுமத்த முடியாது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி. அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுவருகின்ற அதேவேளை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 25 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக