அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 ஜனவரி, 2013

பாடசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுகின்றது: டலஸ்

பா டசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கியமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை மட்டும் குற்றம் சுமத்துவது நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் கல்விமுறைமையிலேயே பிரிவினைவாதம் புரையோடியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், தமிழ், சிங்களம், ஆண், பெண், கலவன் என பல்வேறு வழிகளில் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாத்தன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனோ நிலை தொடரும் வரையில் ஒவ்வொரு மார்ச் மாதமும் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG