அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 நவம்பர், 2012

பணிப்பெண்ணை பாலைவனத்திற்கு கடத்திச் சென்று பல முறை பாலியல் துஷ்பிரயோகம்

இலங்கை பணிப் பெண்ணொருவரை பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தனியாக வீதியில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த 3 பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். 'ஒரு பாலைவனத்திற்கு கடத்திச் சென்ற மூன்று நபர்கள், பல முறை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த போது நான் தப்பித்து வந்து விட்டேன்" என குவைத் பொலிஸாரிடம் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குவைத் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG