த மிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகவீனம் காரணமாக நேற்று புதன்கிழமை பிற்பகல் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தைச் சேர்ந்த என்டனி ஜோசப் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 22 நவம்பர், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக