அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஜனாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக மிருக பலிபூஜை நிறுத்தம்: முன்னேஸ்வரம் கோவில் மதகுரு அறிவிப்பு


னாதிபதியின் வேண்டுகோளின் காரணமாக முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று வியாழக்கிழமை காலை கூடிய முன்னேஸ்வரம் காளி கோவில் நிர்வாக சபையினர் இந்த முடிவை எடுத்ததாகவும், வருடாந்தம் இடம்பெற்றுவரும் மிருக பலி பூஜையினை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இவ்வருடம் மாத்திரம் நிறுத்துவதென முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். புத்தர் பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG