அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இடுப்பில் பீர் பாட்டிலை சொருகிக் கொண்டு சைக்கிள் ஓட்டிய சிறுவன் பாட்டில் வெடித்துப் பலி


தி ருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியில் பீர் பாட்டில் வெடித்ததில், அதை இடுப்பில் வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
திருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் கவுசிகன் (15). 9-ம் வகுப்பு படித்து வந்தான் கவுசிகன். நேற்று இரவு கவுசிகன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையில் பீர் வாங்கியுள்ளான். பின்னர் பீர் பாட்டிலை தனது இடுப்பில் பேண்ட் இடுக்கில் சொருகி வைத்துக் கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். மேம்பலம் என்ற இடம் அருகே கவுசிகன் வந்த போது அதிக அழுத்தம் மற்றும் உராய்வின் காரணமாக பீர்பாட்டில் திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் அவனது அடிவயிற்றில் பாட்டில் கண்ணாடி குத்தி ரத்தப்பெருக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கவுசிகன் மயங்கி விழுந்தான். அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் யாருக்காக பீர் பாட்டிலை வாங்கிச் சென்றான், அதில் பீர்தான் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG