அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர் அநுராதபுர தமிழ்க் கைதிகள்



அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருப்பதாக தனக்கு கைதிகளின் பெற்றோர் தெரிவித்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்... நேற்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகள் பலர் சிறைக் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் அச்சம்பவத்தினை திரிவுபடுத்தி, மாவீரர்தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையை தவிர்க்க முற்பட்டபோதே கைதிகளை தாக்க நேர்ந்ததாக செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். உண்மையில் அப்பாவிச் சிறைக்கைதிகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இன்று உங்களுக்கு விஷேட சாப்பாடு தருகிறோம் என்று கூறி, தமிழ்க் கைதிகளை அழைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் சிறைக் காவலர்கள். இந்நிலையிலேயே தங்களுக்கு நிகழ்ந்த அநீதியினை -சம்பந்தப்பட்டவர்கள் தட்டிக் கேட்கும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் அறிவித்துள்ளனர். அப்பாவி சிறுபான்மையினர் மீது அரசின் அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதால் நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. முதலில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற இதுபோன்ற கீழ்த்தரமான அரச அதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும். இல்லையேல் நல்லிணக்கம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லாது போய்விடும் என்று குறிப்பிட்டார். கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்து சிறைச்சாலைகள் புணர்வாழ்வு அமைச்சின் இணைப்புச் செயலருக்கு அறிவித்திருக்கிறேன். இவ்விடயத்தினை அமைச்சின் மூலமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு தெரிவித்தார் என்றும் குமரகுருபரன் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG