அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

முச்சக்கரவண்டியில் சென்றே பணிகளை முன்னெடுக்கும் நிலை - சபையில் ரணில்

மைச்சுப் பாதுகாப்புப் பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பின் பிரகாரம் தனது பாதுகாப்பு வாகனங்களை செலுத்துவதற்கான சாரதிகளை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று சபையில் பிரதி சபாநாயகரிடம் முறையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முச்சக்கரவண்டியில் சென்று தனது பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்: எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தினால் எனது வாகனத்தை செலுத்துவதற்கென சாரதி ஒருவர் வழங்கப்பட்டுள்ளார். வேறு சாரதிகள் எவரும் என்னிடத்தில் இல்லை. இந்நிலையில் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் அறிவித்தலின் பிரகாரம் பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களை பொலிஸார் செலுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனது பாகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பொலிஸ் சாரதிகளே செலுத்துகின்றனர். இந்நிலையில் என்றுமில்லாதவாறு அமைச்சு பாதுகாப்புப் பிரிவு இவ்வாறு அறிவித்திருக்கிறது. மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக இருப்பின் அது குறித்து அறிவித்து பின்னர் தீர்மானிக்கவேண்டும். இவ்வாறில்லாது செயற்பட்டிருப்பதால் எனது பணிகளை மேற்கொள்வதற்கு நான் முச்சக்கரவண்டியைப் பாவிக்க வேண்டிய நிலைமையே தோன்றியிருக்கின்றது. அப்படியெனின் அரசாங்கமே உத்தியோகபூர்வமாக முச்சக்கரவண்டியொன்றை எனக்குத் தருமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன். இதேவேளை எனது பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட வாகனங்கள் அதிகமாக வாகன திருத்த நிலையங்களிலேயே நிற்கின்றன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கேற்ற வகையில் அரசு செயற்படவேண்டும் என்பதுடன் இதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG