பைக் விபத்தில் படுகாயம் அடைந்த அசாருத்தீன் மகன் அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பியுமான முகமது அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன்(19) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மார்பு, சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பலத்த அடிபட்டிருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அவருடைய இடது சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த 5 நாட்களாக சுய நினைவின்றி உயிருக்கு போராடி வந்த அயாஸுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அயாஸுத்தீன் புனித மேரி கல்லூரியில் பி. காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதே விபத்தில் அசாருத்தீனின் சகோதரியின் மகன் அஜ்மல்(16) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக