அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 25 ஜூன், 2011

தமிழர்நிலை காண பாஜக தலைவர் சுஷ்மாசுவராஜ் இலங்கை வருகிறார்

பா ரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மைலாப்பூரில் கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்றைய கூட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தபோது,
அப்போது அவர், தமிழகத்தில் ஆளுங் கட்சியை வீழ்த்த எதிர்க் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே இந்த தேர்தல் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே என்றாகி விட்டது. இதை மாற்ற பாரதீய ஜனதா மக்கள் பிரச்சினையை கையில் எடுத்து தொடர்ந்து போராடும்.
உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது பற்றி பாராளுமன்றத்தில் பேசினேன். இவ்வாறு தொடர்ந்து நடக்கும் தாக்குதல் வருந்தத்தக்கது. வரும் பாராளுமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து பேசுவேன்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு வந்த போது இலங்கை தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கவுரவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். மறுவாழ்வு பணிகள் துரிதமாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதற்கு பதில் அளித்த இலங்கை ஜனாதிபதி எல்லா பணிகளும் சிறப்பாக நடப்பதாக கூறினார். நான் வருகிற செப்டம்பர் மாதம் இலங்கை செல்ல உள்ளேன். அப்போது தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிடுவேன் என்று கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG