அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 13 ஏப்ரல், 2011

நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது

லங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட இந்த நிபுணர் குழு இலங்கை வந்து விசாரணையை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில்
எழுத்து மூலம் மின்னஞ்சலில் சாட்சியங்களை அனுப்பி வைக்கலாம் என நிபுணர் குழு அறிவித்திருந்தது.
நிபுணர் குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடுவது தார்மீகமான நடவடிக்கை அல்ல என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG