அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஒபாமாவை மகனே! என விளித்து கடிதம் எழுதிய லிபிய ஜனாதிபதி

லிபிய ஜனாதிபதி கடாபி அந்நாட்டின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

ஒபாமாவுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை "மகனே" என விளித்து ஆரம்பித்துள்ளதுடன் இரண்டாவது முறையாக அமெரிக்கத் தேர்தலில் களமிறங்கவுள்ள ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ படைகளின் தாக்குதல்கள் நியாயமற்றதெனவும் அதனை நிறுத்துமாறும் அவர் தனது மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது நாட்டு மக்கள் நேட்டோவின் தாக்குதல்களால் உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில் பல இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் காணப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG