அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மூன்றாவது டெஸ்ட் போட்டியும் வெற்றிதோல்வியின்றி முடிவு: தரப்படுத்தலில் இலங்கைக்குப் பின்னடைவு

லங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5 ஆவது நாளான இன்றைய ஆட்டம் சீரற்ற காலநிலையால் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது.

பள்ளேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாக 103 ஓவர்கள் மாத்திரமே விளையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிவரை ஆட்டம் ஆரம்பிக்கப்பட முடியாது நிலையில் இப்போட்டி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இத்தொடரின் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி 5 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இச்சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்படும்போது இலங்கை அணி மூன்றாம் இடத்திலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி டிசெம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

3 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

சகோதரம்... அன்பு வேண்டு கோள் ஒன்று தங்கள் தளம் தரவிறங்க நீண்ட நேரம் எடுக்கிறது... இதை கவனத்தில் எடுக்க முடியுமா...??

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Unknown சொன்னது…

@ம.தி.சுதா உங்கள் வருகைக்கும் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி நண்பா நிட்சயம் சரி செய்யப்படும்

Unknown சொன்னது…

@ம.தி.சுதாஉங்கள் வருகைக்கும் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி நண்பா நிட்சயம் சரி செய்யப்படும்

BATTICALOA SONG