இலங்கைக் கடற்படையின் வைர விழாவை முன்னிட்டு விசேட வைபவங்கள் இன்றையதினம் காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இலங்கை கடற்படையினரின் 60 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிரதான நிகழ்வு கொழும்பு வெளிச்சவீட்;டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற போது ஜனாதிபதியினால் கடற்படைக்கு விருதுகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச முப்படைத் தளபதிகள் சர்வதேச நாடுகளின் கடற்படைத் தளபதிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு தலைமை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வர்ணம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. முன்னதாக இலங்கை கடற்படைக்கு இரண்டு முறை ஜனாதிபதி விருதுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தநிலையில் நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனரத் இலங்கை கடற்படையினர் அரிய சேவைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்த சேவைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 10 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்









































0 கருத்துகள்:
கருத்துரையிடுக