இலங்கை கடற்படைக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய கடற் பாதுகாப்பு படைப் பிரதி இயக்குனர் வி.எஸ்.ஆர்.மூர்த்தி மற்றும் இலங்கை கடற்படைப் பாதுகாப்பு இயக்குனர் ஜெனரல் ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய ஆகியோர் நேற்று படைத் தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய இச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில்,
"இருநாட்டு கடற் பாதுகாப்பு படைகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பவுள்ளோம். இந்தியா இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், மீன்பிடி மற்றும் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறல் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடினோம்" என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 10 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக