அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

இலங்கை மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்

லங்கை மாலுமிகளையும் கொண்ட மலேஷிய சரக்குக் கப்பலொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த 26 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் கடற்கொள்ளை எதிர்ப்புப் படையணி இன்று தெரிவித்துள்ளது.

23 மாலுமிகளைக் கொண்ட இந்த கப்பல் சோமாலியாவிலிருந்து 900 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படடுள்ளதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எம்.வி. அல்பேடோ எனும் இக்கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கென்யாவின் மொம்பாஸா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் கப்பலில் இருந்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG