அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவின் ஆசனத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : லக்ஸ்மன் நிபுணாரச்சி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ஆசனத்தை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் லக்ஸ்மன் நிபுணராச்சியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் உத்தேசம் ஒருபோதும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெற்றிடமாகியுள்ள ஆசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜே.வி.பி அறிவித்துள்ளது.
இராணுவ நீதிமன்றில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதத்திற்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிடமாகும் பாராளுமன்ற ஆசனத்திற்கு அடுத்த அதி கூடிய விருப்பு வாக்கு பெற்ற கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவது வழமையான நடைமுறையாகும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG