அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 13 அக்டோபர், 2010

அடுத்த மாதம் 19ஆம் திகதிக்குப் பின் புதிய அரசாங்கம் உருவாகும் : ஜனாதிபதி

ரண்டாம் தவணைக்காக தாம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி பதவியேற்க உள்ளதாகவும், அதன் பின்னர் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த கட்டம் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிரண்டு ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. நீண்ட காலத் திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG