அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

தந்தையை கட்டிப் போட்டு விட்டு 15 வயது மகள் மீது வல்லுறவு

சி லாபம் பகுதி வீடொன்றினுள் இரவு நேரம் அத்துமீறிப் பிரவேசித்த இருவர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கட்டிப் போட்டு விட்டு அவ்வீட்டிலிருந்த 15 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச் செயலுடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்
.சந்தேக நபர்கள் இருவரும் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட திருமணமானவர்கள் என்றும், குறித்த சிறுமியின் தந்தை மீது இருந்த குரோதத்திற்கு பலி தீர்க்கும் வகையிலே இக்குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சிறுமியும், அச்சிறுமியின் தந்தையும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சம்பவ தினம் இரவு வேளையில் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ள இரு சந்தேகநபர்களும் சிறுமியின் தந்தையை அவர் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலிலேயே வைத்து கயிற்றினால் கட்டிப் போட்டுவிட்டு சிறுமியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று இருவரும் இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG