அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 செப்டம்பர், 2010

டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது
.அயர்லாந்து தலைநகர் டப்பிளினில், தான் எழுதிய நூலொன்றை வெளியிட்டு, அதில் கையெழுத்திட்டுக் கொடுக்கும் நிகழ்வொன்றில் டோனி பிளேயர் கலந்துகொண்டபோது அவர் மீது சப்பாத்து மற்றும் முட்டைகள் வீசப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த யுத்த எதிர்ப்பாளர்கள் மற்றும் வட அயர்லாந்து சமாதான செயற்பாடுகளை எதிர்க்கும் ஐ.ஆர்.ஏ. சார்பு சின் பெய்ன் ஆதரவாளர்கள் இத்தாக்குதலை நடத்தினர்.
அதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதுடன் பின்னர் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
'ஹே டோனி, இன்று எத்தனை பிள்ளைகளை நீ கொன்றாய்?' என்பது போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பினர். இம்மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகளும் பூட்டப்பட்டன.
"ஏ ஜேர்னி" எனத் தலைப்பிடப்பட்ட மேற்படி நூல் மூலம் கிடைக்கும் வருமானத்தை முன்னாள் யுத்த வீரர்களுக்கு வழங்கப்போவதாக டோனி பிளேயர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

0 கருத்துகள்:

BATTICALOA SONG