அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

துப்புரவு செய்யப்படாத காணிகள் நகரசபைக்குச் சொந்தமாகிவிடும் - சாவகச்சேரி நகரசபைச் செயலர் அறிவிப்பு

சாவகச்சேரி நகரசபை எல் லைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்படாமல் காணப்படும் வெற்றுக் காணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் நகரசபைக்குச் சொந்தமானதாகப் பொறுப் பேற்கப்படவுள்ளது என்று நகர சபைச் செயலாளர் செல்வி வி .சிவக்கொழுந்து தெரிவித் துள்ளார்.

டெங்கு ஒழிப் புத் திட்டத்தின் கீழ் சாவகச்சேரியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வரு கின்ற நிலையில் ஒருசில ஆட்க ளற்ற காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமையால் அவை பற்றை கள் வளர்ந்து காணப்படுகின்றன.இக் காணிகளின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காணிகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் துப்புரவு செய் தல் வேண்டும். இல்லையேல் நகர சபை அந்தத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் காணியைச் சபைக்குச் சொந்தமானதாக எடுத்துக் கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG